இனத்திற்காக வீர மரணத்தை வித்திட்ட வீர வேங்கைகளின் திருநாள் சிறப்புகள்!

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து.

உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்.

பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.

வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் ஆவார்.

இவர் யாழ் வடமராட்சி மாவட்டத்திலே கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 யூன் 19ம் நாளில் பிறந்தவர். 1982 நவம்பர் 27ம் நாளில் அவர் வீரச்சாவடைந்தார்.

மாவீரர்களின் இறப்பை வீரச்சா என்று அழைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமோர் மரபு மாவீரர்களின் சா தனித்துவமானது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் “ என்று கூறியுள்ளார்.

லெப் சங்கரின் வீரச்சா நாளான நவம்பர் 27 ஈழத் தமிழர்களாலும் உலகத்தமிழர்களாலும் மாவீரர் நாளாகக் கொண்டாடப் படுகிறது.

களப்பலியான முதல் புலி மாவீரனும் ஒரு வீரப் பரம்பரையைத் தொடங்கிய முன்னோடியுமான சங்கர். தமிழர் வாழும் நாடெல்லாம் வீடெல்லாம் நினைவு கூரப்படுகிறார்.

யாழ் திருநெல்வேலியில் நடந்த ஒரு முற்றுகையில் காயத்துடன் மீட்கப்பட்ட சங்கர் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டிற்குக் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்டார்.

பெரும் குருதிப் பெருக்கு ஏற்பட்டாலும் அவர் தப்பிப் பிழைப்பார் என்ற நம்பிக்கை அவரை எடுத்துச் சென்றவர்களுக்கு இருந்தது.

அது தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குச் சொந்தமான மருத்துவ பிரிவையும், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பணியாளர்கள், குருதிப் பெருக்கை நிறுத்தி உடனடி சத்திர சிகிச்சை வழங்குவோர் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிராத காலம்.

புலிகளின் வளர்ச்சிப் பாதையில் மருத்துவக்கல்வி தொடக்கம் கள மருத்துவம் வரையிலான முக்கிய கட்டங்கள் உள்ளன போராளி மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதிகள் சிகிச்சைக்குப் பிந்திய அனுசரனை வழங்குவோர் என்று புலிகளின் மருத்துவக்கட்டமைப்பு விரிகின்றது.

கால் கை உறுப்புக்களை இழந்த போராளிகளுக்குச் செயற்கை உறுப்புக்களை வழங்கும் பிரிவை வெண்புறா அமைப்பு என்ற பெயரில் புலிகள் செயற்படுத்தினர் ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புத் திட்டத்தைப் பின்பற்றிச் சில மாற்றங்களோடு புலிகள் அதை நடைமுறைப் படுத்தினர்.

மீண்டும் களத்திற்குத் திரும்ப முடியாத போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் லெப்கேணல் நவம் (செல்லப்பெருமாள் அருமைராசா) பிறப்பிடம் கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு, பிறப்பு 1961 பெப்பிரவரி 02 வீரச்சாவு 1989 மே 15 அவர்கள் பெயரில் நவம் அறிவுகூடம் என்ற நிலையத்தைப் புலிகள் திறந்தனர்.

லெப்கேணல் நவம் புலிகளின் தாக்குதல் தளபதிகள் வரிசையில் முதலிடம்; பிடிப்பவர் ஒரு கையை இவர் வெஞ்சமரில் இழந்தவர். எனினும் இந்தியப் படையினருடன் பொருதிய போது படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் நவம் அறிவு கூடத்தில் கணினிக் கல்வியுடன் தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் ஆதாரக் கல்வியும் வழங்கப்பட்டது கண் இழந்தோருக்கு பிறெயில் முறைப்படி கல்வி புகட்டப்பட்டது.

நவம் காட்டுச் சண்டையில் வல்லவர் காட்டுப் பாதைகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர் இந்தியப் படைகளுடனான வன்னிச் சமர்களில் அவருடைய இந்த அறிவு ஆக்கிரமிப்புப் படையைக் கட்டிப் போடுவதற்கு உதவியது. தேசியத் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் நவம் ஏற்றார் “நவம் இல்லாவிட்டால் நான் இல்லை” என்று பிரபாகரன் அவர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

தமிழ் நாடு கொண்டு செல்லப்பட்ட லெப் சங்கருக்கு உலகத்தமிழரின் பேராதரவு பெற்ற பெருந் தலைவர் நெடுமாறன் ஜயா அவர்களின் பண்ணை வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனளிக்காமல் மாலை 6.05 மணியின் போது அவர் வீரச்சாவடைந்தார்.

சங்கரின் வீரச்சா நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும் அதே வேளையில் சங்கரின் சா எவ்வளவு தூரம் தேசியத் தலைவர் அவர்களைப் பாதித்துள்ளது என்பதை உலகத் தமிழர்கள் உணர வேண்டும்

நான்கு பிள்ளைகளில் கடைசியானவர் என்ற காரணத்தால் பிரபாகரனைச் செல்லமாகத் தம்பி என்று அழைப்பார்கள்.

சங்கரின் உயிர் பிரியும் வரை அவருடைய வாய் தம்பி தம்பி என்று ஒலித்தபடி இருந்தது இறுதிவரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன் அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை மூன்று நேரமும் உணவு அருந்துவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பிரபாகரன் சொன்னார்.

உலகத் தமிழுறவுகள் விடுதலைப் புலிகளின் இன்னும் சில விசேட அடையாளங்களையும் அறிய வேண்டும் விடுதலைப் புலி அமைப்பில் இணைவோர் மிக இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்றவற்றை முற்றாக கைவிட வேண்டும்.

பொது மக்களின் நலனில் முழுக்கவனஞ் செலுத்துவதோடு அர்ப்பணிப்பு, ஈகம் மண் பற்று, இனப்பற்று ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியம் உறுப்பினராக இணைவோருக்கு இயற்பெயர் தவிர்ந்த பிறிதோர் பெயர் வழங்கப்படுகிறது இதை வழமையாக இயக்கப்பெயர் என்கிறார்கள் பிரெஞ்சு மொழியில் நொம் டி கரே எனப்படுகிறது.

புலிகள் அமைப்பில் இணையும் அனைவரும் சமமாகப் பார்க்கப்படுகின்றனர் எல்லோரும் வீரவேங்கைகள் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் களப்பலியாகி மாவீர்களாகும் போது தகுதி, சாதனை சேவைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இராணுவப் பதவி வழங்கப்படுகிறது.

இராணுவப் பதவி என்பது ஜக் குறிப்பிடுகின்றது வீரச்சாவடைந்த பின் பதவி வழங்கும் வழமையைப் பிறிதோர் இராணுவக் கட்டமைப்பிலும் காண முடியாது எனினும் சில குறிப்பிடத்தக்க புலிக் கட்டளைத் தளபதிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலே கேணல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் இதை விதிவிலக்கு எனலாம்.

ஏண்ணிக்கைய் பொறுத்தளவில் லெப் கேணல் தர அதிகாரிகளின் வீரச்சாவு மிக அதிகம் இடை நிலை அதிகாரிகள் படை நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்னைப் பின் தொடர் என்ற கோட்பாடு இதில் செயல்வடிவம் காண்கிறது. இஸ்ரெயில் இராணுவத்திலும் என்னைப் பின்தொடர் என்ற கோட்பாடு காணப்படுகிறது.

கட்டளைத் தளபதிகளுக்கு கேணல் பட்டம் வாழ்நாளில் வழங்கப்படுவதாக ஏற்கனவே சொன்னோம் இவர்களில் ஒரு சிலர் பற்றிக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும். தலைவர் அவர்களுடன் இணைந்து அவருடைய போரியல் தத்துவங்களுக்கு ஒப்பற்ற வடிவம் கொடுத்த கேணல் ராயு, அம்பலவாணர் நேமிநாதன் 1961 மே 30 – 2002 ஆகஸ்து 25 வீரச்சாவு பற்றி விசேடமாகக் குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகளின் சிறப்புக் கொமான்டோ பிரிவை உருவாக்கியவர். வுpடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிப் பிரிவு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். எலத்திரனியல் மற்றும் கணினிக் கருவிகளைக் களமுனையிலும் ஆய்வு கூடத்திலும் திறம்பட இயக்கியவர் என்ற பல சிறப்புக்களுக்கு ராயு உரியவர் .மேலும் இஸ்ரெயில் தாயாரிப்பு ஆளில்லா வேவு விமானத்தை விண்ணில் இருந்து வீழ்த்திய தொழில்னுட்ப சிறப்பு அவருடையதாகும்.

எதிரி வீழ்த்த முடியாத இவரைப் புற்று நோய் சாய்த்து விட்டது முகமாலை எல்லைக் காவலன் கேணல் தீபன், கடற்படைத் தளபதி கேணல் சூசை, மாலதி படையணித் தலைவி கேணல் விதுசா, சோதியா படையணித் தலைவி கேணல் துர்க்கா ஆகியோரின் சாதனைப் பட்டியல் நீளமானது.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும் என்பது சான்றோர் வாக்கு ஏறத்தாழ 40.000 வரையிலான மாவீரர்களை தமிழீழம் கண்டிருக்கிறது.

மாவீரர் வரலாறு தியாக வரலாறாக இடம் பெறுகிறது இதை விட வேறு விளக்கம் சொல்ல முடியாது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று குரல் கொடுத்த மாவீரன் லெப் கேணல் திலீபன், இராசையா பார்த்தீபன் ஊரெழு, யாழ்1963 நவம்பர் 27 வீரச்சாவு 1987 செப்ரம்பர் 26 பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

போர்க் களச் சாதனையாளரான திலீபன் 1987 செப்ரம்பர் 15 தொடக்கம் 26 ம் நாள் வரையிலான பன்னிரண்டு நாள் நீரின்றி உண்ணாநோன்பு இருந்து இறுதி நாளில் தனது இன்னுயிரைத் தற்கொடை ஆக்கியவன் திலீபன் காந்தி தேசத்தின் ஓரவஞ்சகத்தை உலகிற்கு உணர்த்தியவன் திலீபன்.

முதலாவது ஆண் மாவீரர் லெப் சங்கர், முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, சகாயசீலி பேதுரு, மன்னர் 1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 இந்திய இராணுவத்தை எதிர்த்து யாழ் கோப்பாயில் நடந்த போரில் இவர் வீரகாவியமானார்.

விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மாலதி படையணி இவர் பெயரில் இயங்குகிறது. 2ம் லெப்டினன் அனிதா சித்திராதேவி தம்பிராசா 19.09.1970 – வீரச்சாவு 28.11.1988. இவர் தென் தமிழீழத்தின் வீரச்சாவடைந்த முதலாவது பெண் போராளியாவார்.

பெண் போராளிகளின் பங்காற்றுகை பற்றித் தேசியத் தலைவர் பின்வருமாறு கூறினார் நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகர்த்தி இருக்கிறோம் தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

ஏமது விடுதலைப் போரின் மிகப் பெரிய சமூகப் பெறுபேறுகளில் பெண் விடுதலை முன்னணி இடம் வகிக்கின்றது.

ஒரு கைவிரலில் எண்ணக் கூடியளவு பிரிகேடியர்களை தமிழீழ விடுதலைப் புலித் தலைமை அங்கீகரித்திருக்கிறது மேற்கூறிய பெண் படையணித் தலைவிகள் இருவரும் 2009 ஏப்பிறில் 04ம் நாள் களத்தில் வீரச்சாவடைந்தனர். இருவரும் பிரிகேடியார் தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளனர்.

முதலாவது பிரிகேடியர் என்ற வரலாற்றுச் சிறப்பு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சாரும் பரமு தமிழ்ச்செல்வன் யாழ் சாவகச்சேரி 1967 ஆகஸ்து 29 – வீரச்சாவு 2007 நவம்பர் 02ம் நாள் பெரும் படை வீரனாகத் திகழ்ந்த இவர் 1993 தொடக்கம் அரசியல் துறைப் பொறுப்பாளராக நிலை பெற்றார் எதிரியின் குண்டு வீச்சில் வீரச்சாவடைந்தார், தேசியத் தலைவரின் சிந்தனை ஓட்டத்தை நன்கு அறிந்தவர் சர்வதேசம் புகழ் பெற்ற அதியுயர் இராசதந்திரியாகச் செயற் பட்டார்.

சமர்க்கள நாயகன் என்று பலராலும் அறியப் படும் பிரிகேடியர் பால்ராஜ் – லீமா, பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு 1965 நவம்பர் 27 வீரச்சாவு 2008 மே 20 உலகின் போரியியல் வரலாற்றில் தடம் பதித்தவர்.

ஆற்றல் மிகுந்த ஆன்ம வல்லமை மிகுந்த இலட்சியப் போராளி அவர் நடத்திய குடாரப்புத் தரையிறக்கம் உலகின் முன்னணி இராணுவக் கல்லூரிகளில் கருத்தூன்றிப் படிக்கப் படுகின்றது.

முக்கியமாகச் சொல்ல வேண்டியதாக விடுதலைப் புலிகளின் போரியல் மரபு இருக்கிறது ஒவ்வொரு இராணுவத்திற்கும் ஒருவகைப் பாரம்பரியம் இருக்கிறது இதை எஸ்பிறே டீ கோர்(நுளுPஐசுஐவு னுநு ஊழுசுPளு ) என்பார்கள் இதை அடியெடுத்துக் கொடுத்த மாவீரன் மூத்த தளபதி லெப் சீலன் 1960 டிசெம்பர் 11 – வீரச்சாவு 1983 யூலை 15 இவருடைய இயற் பெயர் லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி. திருமலையைச் சேர்ந்தவர்.

எதிரியின் முற்றுகையில் காயப் பட்டுத் தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டார் இதன் மூலம் வீரச்சாவடைந்த அவர் புலிகளின் வீரமரபிற்கு வித்திட்டார் தேசியத் தலைவரின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிடப் பட்டுள்ளார்.

விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு இதற்கான மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச்சின்னங்களையும் சிதைக்கும் நடவடிக்கையில் எதிரி ஈடுபடுகிறான். புலிகள் ஏற்படுத்திய விழிப்புக் கண் உறங்காது என்று அவனுக்குத் தெரியும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்