3 கணவர்களை கொலை செய்த கொடூரமான மனைவி…!

கனடா நாட்டில் 5 ஆண்களை திருமணம் செய்து அவர்களில் 3 பேரை கொடூரமாக கொலை செய்துள்ள பெண்ணை பற்றிய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Nova Scotia மாகாணத்தை சேர்ந்த Melissa Ann Shepard(81) என்ற பெண் தான் தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு கொடூரமான குற்றங்களை புரிந்துள்ளார்.

கணவர் 1

முதன் முதலாக மெலிசா Russel Shepard என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவரில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கணவர் பிரிந்து சென்று விட்டார். மெலிசாவின் கொலைப்பட்டியலில் சேராத அதிர்ஷ்டக்கார முன்னாள் கணவர் இவர் தான்.

கணவர் 2

முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற மெலிசா கடந்த 1992-ம் ஆண்டு Gordon Stewart என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

ஒரு நாள் தனது கணவருக்கு அளவுக்கு அதிகமான போதை மருந்து கொடுத்து அவர் மீது கொடூரமாக கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக மெலிசாவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

கணவர் 3

தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த மெலிசா 8 ஆண்டுகளுக்கு பிறகு Robert Friedrich என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

ராபர்ட்டின் சொத்தில் பாதிக்கு மேல் தனது மனைவியான மெலிசா மீது எழுதி வைத்த பிறகு அவரை விஷம் வைத்து மெலிசா கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் மெலிசா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

கணவர் 4

இச்சம்பவத்திற்கு பிறகு கனடாவை விட்டு வெளியேறிய மெலிசா அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குடியேறினார். இங்கு ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவருக்கு தினமும் கண்டுபிடிக்கமுடியாத விஷம் கொடுத்து அவரை இறுதியில் கொலை செய்துள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், மெலிசாவிற்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கணவர் 5

சிறையில் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த மெலிசா 2012ம் ஆண்டு Fred Weeks என்பவரை திருமணம் செய்துள்ளார். முன்னாள் கணவர்களுக்கு செய்த அதே சதி திட்டத்தை இவருக்கும் மெலிசா செய்துள்ளார்.

கணவரின் தேநீரில் விஷம் கலந்து கொடுத்தபோது மருத்துவர்களால் அது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கொலை முயற்சி வழக்கில் கைதான மெலிசாவிற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.