மாணவனைத் தாக்கிவிட்டு அவரது கையில் கீறியுள்ள இனவாதிகள்!

தலவாக்கலை காவல்நிலையத்திற்குட்பட்ட சிங்கள மொழிப் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுச் சிறுவன் மீது இனந்தெரியாதோர் மோசமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவன் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

கடந்த 23ஆம் திகதி குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து தனது வீட்டுக்கு செல்லும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவன் மயக்கமடைந்து சில நிமிடங்களுக்கு பின் தனது வீட்டுக்கு சென்றதாக மாணவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

தாக்கிய நபர்கள் குறித்த மாணவனின் வலதுகரத்தில் ‘தமிழ்’ என எழுதிவிட்டு சென்றதாகவும் மாணவன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளைஇ தாக்குதலுக்குள்ளான மாணவனை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக லிந்துலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.stu2