இலங்கையில் டிசம்பர் முதலாம் திகதி முதல் தனியார் பேரூந்துக்கள் சேவையில் இல்லை

தனியார் பேருந்துக்கள் எதிர்வரும் முதலாம் திகதி இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து வாகனங்களின் ஏழு குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையாக 25,000 ரூபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 29 சங்கங்கள் இணைந்து கொள்ள உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் விஜய குமார தெரிவித்துள்ளார்.