பசில் ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக, அமெரிக்கா செல்ல அனுமதியளிக்குமாறு தனது சட்டத்தரணியூடாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.