பக்தாத்தில் குண்டு வெடிப்பு :பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

ஈராக்கின் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.

பக்தாத்தின் கர்பலா பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தினால் மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலிற்கு ஜ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.