மீண்டும் நான் அப்பா ஆகியிட்டேன்: டுவிட்டரில் குதூகலிக்கும் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரீசாந்த்.

2011ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்ட பிரச்சனையில் சிக்க இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக ஓரம்கட்டப்பட்டார்.

பல்வேறு பிரச்சனைகளிலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர் அவருடைய காதல் மனைவி சன்விகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தான் மீண்டும் அப்பாவாகி விட்டதாக டுவிட்டரில் குதூகலித்துள்ளார் ஸ்ரீசாந்த்.இந்த முறை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.