மருமகள் ஐஸ்வர்யாராய் ஆதரவு, மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்பு. எதற்கு தெரியுமா?

ஊழல், கருப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக சமீபத்தில் பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு அமிதாப்பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோர் தங்கள் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் இன்று ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் அமிதாப்பின் மனைவியும் ஐஸ்வர்யாராயின் மாமியாருமான ஜெயாபச்சன் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மோடியின் அதிரடி திட்டத்திற்கு மாமியார் எதிர்ப்பும், மருமகள் ஆதரவும் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.