தமிழக இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி! ஜெயலலிதா நன்றி அறிக்கை

தமிழகத்தில் கடந்த 19ம் திகதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.

இன்று வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது, இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். “

வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக-வின் பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பல்லோவில் இருந்தபடியே, முதல்வர் ஜெயலலிதா நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், உடல்நலம் தேறி வரும் எனக்கு 3 தொகுதி வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது.

மகத்தான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி.

மக்கள் என்பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.