மர்ம நபரால் நடிகை ஹன்சிகா, த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்

பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த சில தொடர்பு எண்களை அழித்துள்ளார்.

நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர், போன் என அனைத்தையும் ஹேக் செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபைல் போனையும் யாரோ ஒருவர் ஹேக் செய்துள்ளார்.

இது குறித்து ஹன்சிகா, த்ரிஷா இருவருமே டுவிட்டரில் புலம்பி தீர்த்துள்ளனர்.

இது குறித்து த்ரிஷா டுவிட்டரில் கூறுகையில், என்னுடைய போன் நம்பர் தெரிந்த, டுவிட்டரில் என்னை பின் தொடரும் மற்றும் என்னுடைய நண்பர்கள் உங்களுடைய நம்பரை வாட்ஸ் அப் செய்யுங்கள்.

யாரோ வேலையில்லா கோழை என் போனை ஹேக் செய்து அனைத்து தொடர்பு எண்களையும் அழித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் த்ரிஷாவின் டுவிட்டை பார்த்த ஹன்சிகா, எனக்கும் அதே தான் நடந்துள்ளது. தயவு செய்து உங்கள் பெயருடன் எனக்கு டெக்ஸ்ட் செய்யவும் என தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் த்ரிஷா, ஹன்சிகா இருவரின் போன்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.