வேந்தர் மூவிஸ் மதன் அதிரடி கைது

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.

அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக’ கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை மணிப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.