மீண்டும் சாதித்த வெள்ளி மங்கை பி.வி. சிந்து!

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் சீன ஓபன் போட்டியில் பங்கேற்ற பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் கொரிய வீராங்கனை சங் ஜி யுன்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதைத் தொடர்ந்து சாம்பியன் பட்டத்துக்காக இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சீன வீராங்கனை சன் யூ-வை 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் சாதித்துள்ளார்.