பாடிபில்டிங் மோகத்தால் பெற்ற மகளின் நஞ்சுக் கொடியை சமைத்து தின்ற தந்தை!

பாடி பில்டிங் செய்யும் நபர்கள் புரத சத்து அதிகம் எடுத்துக் கொள்வார்கள். இது அவர்கள் சிறந்த முறையில் உடற்கட்டை அதிகரிக்க உதவும். இதற்காக நிறைய காய்கறிகள், சிக்கன் போன்றவற்றை உண்பார்கள். ஆனால், இங்கு பாடி பில்டிங் மோகம் கொண்ட ஒரு தந்தை தான் பெற்ற மகளின் நஞ்சுக்கொடியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.
ஆரோன் கர்டிஸ்!

ஆரோன் கர்டிஸ் என்பவருக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை குழந்தை பிறந்துள்ளது. இவர் மருத்துவமனையில் இருந்து இவரது மனைவி, மகளை மட்டும் வீட்டுக்கு எடுத்து வரவில்லை. மகளின் நஞ்சுக் கொடியையும் கையோடு எடுத்து வந்துள்ளார்.

நஞ்சுக்கொடியை எடுத்து வந்ததன் காரணம்!

ஆரோன் கர்டிஸ் தன் மகளின் நஞ்சுக்கொடியை எடுத்து வந்ததன் காரணம், தன் மகளுக்கு பிரசவ காலத்தில் வாழ்க்கை அளித்த அந்த உறுப்பை உட்கொள்ள வேண்டும் என்பதால் தான். நஞ்சுக்கொடியை உண்பதால் ஆதாயம் இருக்கிறது என அவர் கருதியுள்ளார்.

சமைத்து சாப்பிட்ட ஆரோன் கர்டிஸ்!

நஞ்சுக்கொடியை வீட்டுக்கு எடுத்து வந்து, அதை பக்குவமாக சமைத்து சாப்பிட்டுள்ளார் ஆரோன் கர்டிஸ். இதை கேட்கவே அருவருப்பாகவும், ஆரோன் கர்டிஸ் மீது வெறுப்பும் வருகிறது. ஆனால், ஆரோன் கர்டிஸ் எப்படி மனம் நோகாமல் சாப்பிட்டார் என்பது தெரியவில்லை.

ஏன் இப்படி?

நம் ஊர்களில் மட்டுமல்ல, உலகம் எங்கும் பெரும் மதிப்புடன் பார்க்கப்படும் பிரசவத்தின் ஒரு அங்கத்தை சாப்பிட்டு தான் ஆதாயம் பெற வேண்டுமா? எந்த ஊராக இருப்பினும், எந்த நாகரீகமாக இருப்பினும் மனிதம், மனதில் இருக்கும் ஈரம் ஒன்று தானே!