நெய் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்

வீட்டில் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு, இரண்டு முக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக் கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.