அஸ்தியுடன் சங்கமமான குடும்பஸ்தர்!

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேல் அழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தர் கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடியபோது பரிதாபகரமாக உயிரிழந்தார்.

அஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலைக்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் அங்கு மாலை 6 மணியளவில் நீராடிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.