சட்டத்திற்கு முரணாக 11இளைஞர்கள் கைது! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு முரணாக 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் ஆவாக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என குற்றம் சாட்டியே கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செயய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இளைஞர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ள நிலையில், தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சட்டத்திற்கு முரணாக உள்ளது என உறவினர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.