பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் கைது!

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம்பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்தமை தொடர்பான கடிதத்தினை பயங்கரவாரத்தடுப்பு பிரிவு பொலிசார் அவரதுகுடும்பத்தினரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுபின்னர் அங்கிருந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பெற்றோர் இன்று(14) தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடையொன்றில் வேலை செய்துவந்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவுடன் தொடர்புபட்டிருக்கலாம்என்றும், அதனடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்வெளியிடப்பட்டுள்ளது.