கண்களைத் தாக்கும் அலர்ஜி

அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்­க­னவே அலர்ஜி இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா, சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறு­ப­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம்.

பொது­வாக கண்­களில் வரக்­கூ­டிய அலர்­ஜிக்கு  Allergic Conjunctivitis என்று பெயர். Conjunctiva என்றால் கண்­களின் வெள்ளைப் பகு­திக்கு மேல் உள்ள கண்­ணாடி போன்ற டிரான்ஸ்ஃ­பரன்ட்  பகுதி. அந்த வெள்ளைப் பகு­திக்குப் பெயர் Sclera. அதற்கு மேல் டிரான்ஸ்ஃ­பரன்ட் பகு­தி­யான Conjunctiva வில் ஏற்­ப­டு­கிற அலர்­ஜிதான் Conjunctivitis. குழந்­தை­க­ளுக்கு ஏற்­படும் இந்த நிலைக்கு Spring catarrh என்று பெயர். அதா­வது, ஸ்பிரிங் சீசன் என சொல்­லக்­கூ­டிய வசந்த காலத்தில் ஏற்­ப­டு­கிற அலர்ஜி இது. இதற்கு  Giant Papillary Conjunctivitis என இன்­னொரு பெயரும் உண்டு.

கண்­களின் மேல் இமைப் பகு­தியைத் தூக்கிப் பார்த்தால் பெரிய பெரிய கற்கள் போல அந்த conjunctiva பகுதி வீங்கிப் போயி­ருக்கும். அதனால் குழந்­தைக்கு வெள்ளை நிறத்தில் கயிறு மாதிரி அழுக்கு வந்து கொண்டே இருக்கும். தவிர கண்­களைப் போட்டுத் தேய்த்துக் கொண்டே இருப்­பார்கள். கண்கள் சிவந்து போகும். கண்­களின் வெள்ளைப் பகு­தி­யா­னது மெது­வாக வித்­தி­யா­ச­மான நிறத்­துக்கு அதா­வது, வெளிர் மஞ்­ச­ளாக மாறி­விடும். குழந்­தையின் கண்­களே பார்ப்­ப­தற்கு வித்­தி­யா­ச­மாகக் காட்­சி­ய­ளிக்கும். பெரும்­பா­லான பெற்­றோரும் இதை சாதா­ரண அலர்ஜி என மருந்து போட்டு அலட்­சி­ய­மாக விட்­டு­வி­டு­வார்கள். மருத்­து­வ­ரிடம் அழைத்துச் செல்ல மாட்­டார்கள்.

கார்­னியா எனப்­ப­டு­கிற கரு­வி­ழியில் ரத்தக் குழாய்கள் கிடை­யாது. அதை Avascular என்­கிறோம். ஆனால், இந்த அலர்ஜி அலட்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கிற பட்­சத்தில் கரு­வி­ழி­களில் ரத்தக் குழாய்கள் வளர்ந்து கரு­வி­ழிகள் வெள்­ளை­யாக மாறி, பார்வைக் குறை­பாடு ஏற்­படும் அபாயம் அதிகம். கூடவே கிளாக்­கோமா எனப்படு­கிற கண் அழுத்த நோய் அதி­க­ரிக்­கவும் வாய்ப்­புகள் அதிகம். அதா­வது, நீண்ட கால ஸ்டீராய்டு மருந்தின் உப­யோ­கத்­தாலும் கண் அழுத்த நோய் வரலாம். எனவே, இதை சாதா­ரண அலர்­ஜி­யாக அலட்­சி­யப்­ப­டுத்தக் கூடாது.

குழந்­தை­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். அசுத்­த­மான மண்ணில் விளை­யாட விடக்­கூ­டாது. கை நகங்­களை வெட்டி விட வேண்டும். குழந்­தைகள் வெளியில் சென்­று­விட்டு வீட்­டுக்கு வந்­ததும் கை, கால்­க­ளையும் கழுவப் பழக்­கு­வ­தோடு, கண்­க­ளிலும் குளிர்ந்த தண்­ணீரை அடித்து சுத்தம் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். தூசி, பூவின் மக­ரந்தம் மற்றும் பூச்­சிகள் இந்த மூன்­றும்தான் பிர­தா­ன­மாக அலர்­ஜியை ஏற்­ப­டுத்­து­கிற விஷ­யங்கள். இது தவிர தலையில் பொடுகு இருந்தால் கண்­களில் உள்ள இமை முடி­க­ளிலும் பொடுகு வரலாம். அதற்குப் பெயர் Blepharitis. அதா­வது, கண் இமையில் ஏற்­ப­டு­கிற அலர்ஜி.

இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொடுகின் கார­ண­மாக ஏற்­ப­டு­வது. இன்­னொன்று இமை முடியில் ஏற்­ப­டு­கிற தொற்றின் கார­ண­மாக வரு­வது. மிக அரி­தாக கண்­களில் பேன் கூட வரு­வ­துண்டு. இமை முடி­களில் வரு­கிற பேன்­களைக் கண்­டு­பி­டிப்­பதே மிகவும் சிரமம். Slit lamps என்­கிற கரு­வியின் உத­வி­யுடன் பெரி­து­ப­டுத்திப் பார்த்­தால்தான் பேன்­களின் முட்­டைகள் இருப்­பதைக் கண்­டு­பி­டிக்க முடியும். இதற்­கான சிகிச்சை ரொம்­பவே சவா­லா­னது என்­றாலும் சாத்­தி­ய­மா­ன­துதான். குழந்­தைகள் கண்­களை அடிக்­கடி தேய்த்துக் கொண்டே இருப்­பார்கள்.

இமை முடி­களில் வெள்ளை வெள்­ளை­யாகத் தெரியும். படிப்பில் கவனம் இருக்­காது. மருத்­து­வ­ரிடம் காட்­டினால் மேலே சொன்ன விஷ­யங்­கள்தான் காரணம் என்­பது தெரிய வரும். இவை எல்­லா­வற்­றுக்கும் அந்­த­ரங்க சுத்­தமும் சுகா­தா­ரமும் மிக முக்­கியம். தலையில் பொடுகு இருந்தால் அதை சரி­யாக்க பிரத்­யேக ஷாம்பு உப­யோ­கித்து சரி செய்ய வேண்டும். கண் இமை முடி­யையும் பேபி ஷாம்பு உப­யோ­கித்து சுத்தம் செய்ய வேண்டும். கண் மருத்­துவர் பரிந்­து­ரைக்­கிற மருந்­து­களை முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும். அலர்­ஜியை உண்­டாக்­கக்­கூ­டிய உண­வு­க­ளையும் பிற விஷ­யங்­க­ளையும் தவிர்க்க வேண்டும்.

குழந்­தை­களை டூ வீலரில் கூட்டிச் செல்லும் போது முன் பக்­கத்தில் உட்­கார வைக்­கக்­கூ­டாது. நடுவில் உட்­கார வைக்க வேண்டும். ரொம்­பவும் குட்டிக் குழந்தை என்றால் தன்னை நோக்கி உட்­கார வைத்துக் கொள்­ளலாம். குழந்­தைக்கு கூலிங் கிளாஸ் போட்டு அழைத்துச் செல்­லலாம். பிரச்னை சரி­யா­னாலும், மருத்­துவர் ஆலோ­ச­னைக்கு வரச் சொன்ன தேதியில் போக வேண்டும். சரி­யாகி விட்­டதே என அலட்­சி­ய­மாக விடக்­கூ­டாது. சில நேரங்­களில் இதிலும் நீண்ட காலப் பிரச்­னைகள் வரலாம்.அலர்­ஜி­யினால் கரு­வி­ழி­கூட பாதிக்­கப்­ப­டலாம். அதை Keratitis என்­கிறோம். அடுத்து மிக அரி­தாக, அலர்­ஜியா, மெட்ராஸ் ஐ பிரச்­னையா என்­கிற குழப்­பம்­கூட வரலாம்.

மெட்ராஸ் ஐ என்­பதும் ஒரு­வ­கை­யான அலர்­ஜிதான். அது  அடினோ வைரஸ் என்­கிற தொற்­றினால் வரு­வது. சில நேரங்­களில் பாக்­டீ­ரி­யாவும் சேர்ந்து தொற்றை உரு­வாக்­கலாம். கண்கள் பாதியோ, முழு­வ­து­மா­கவோ வீங்­கலாம். கண்­களில் இருந்து மஞ்சள் நிறக் கசிவு வரலாம். கண்கள் சிவந்து போகலாம். இப்­போது வரும் மெட்ராஸ் கரு­வி­ழி­க­ளையும் பாதிக்­கி­றது. சுய மருத்­துவம் கூடாது. மருத்­து­வரைப் பார்த்து அவர் சொல்­கிற நாட்கள் வரை மருந்­து­களை எடுத்துக் கொள்ள வேண்டும். தனி சோப், தனி டவல் என அதி­க­பட்ச சுகா­தாரம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இது குழந்­தைகள், பெரி­ய­வர்கள் என எல்­லோ­ருக்கும் வரும். குறிப்­பாக திடீ­ரென மழை பெய்து, நின்றால் நிறைய பேருக்கு இந்தப் பிரச்சி­னையைப் பார்க்­கலாம்.