தொடரும் அவலம்! 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

நான்கு வயதான சிறுமிக்கு அவளின் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி என்னும் ஊரில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு பல மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அங்கு எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் நான்கு வயது சிறுமி சில தினங்களாக உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளிடம் கேட்டதற்கு அவள் அதிர்ச்சியான விடயத்தை அவர்களிடம் கூறியுள்ளார்.

அதாவது, அந்த பள்ளிக்கூடத்தில் செந்தில் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக அவள் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

உடனே இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர். உடனே அந்த பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் ஆசிரியர் செந்திலை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்