மைத்திரி – சந்திரிக்கா இரகசிய சந்திப்பு! பேசப்பட்ட விடயங்கள் மூடி மறைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்கவும் மிகவும் இரகசியமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்

இந்த சந்திப்பு, அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நண்பகல் 12.30 மணிளவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஹொலகொல்ல இல்லத்துக்கு சென்றுள்ளார்.

இதன்பின்னர் இருவரும் தனியே சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது எவரும் அங்கிருக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவுகளை அடுத்த வாரத்தில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சந்திரிக்காவின் தரப்பு தெரிவித்துள்ளது.