மாணவியை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்!

ராஜஸ்தானில் பள்ளி மாணவியை போனில் மிரட்டி சீரழித்த ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ஹென்தர குமார் என்பவர் மிர்சாபூருக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதேபள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தன்னுடன் ஒத்துழைத்து போகுமாறும், இல்லாவிட்டால் பரீட்சையில் பெயிலாக்கி விடுவதாகவும் போனில் மிரட்டி மாணவியை இரு முறை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே நேற்று அவர்கள் அந்த ஆசிரியருக்கு மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிசார், அந்த ஆசிரியரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரி பாசுராம் சாய்னி தலையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.