ஜட்டியுடன் விமான நிலையத்துக்கு வந்த போதை மனிதன். அலறிய பெண்கள்

மனிதனுக்கு போதை ஏறிவிட்டால் என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே பலர் நடமாடுவார்கள். இந்நிலையில் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி என்ற நாட்டில் விமான நிலையத்திற்கு ஜட்டியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் மலாவி விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி வந்த நிலையில் ஒரு பயணி கையில் லக்கேஜ் உடன் வந்தார். அவரை பார்த்ததும் பெண் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். வெறும் ஜட்டியுடன் அவர் வந்ததே இதற்கு காரணம்.

பின்னர் அவரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது கஞ்சா என்ற போதைப்பொருளை அவர் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபரை ஜட்டியுடன் புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.