டிரான் அலஸ் பிணையில் விடுதலை!

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தவைிட்டுள்ளது.

டிரான் அலஸ்ஸை பிணையில் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு அமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராடா என்னும் நிறுவனத்தின் ஊடாக சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக சுமார் 200மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக டிரான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும்.இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.