முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை டி.வி. நடிகை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

தனக்கு முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை டி.வி. நடிகை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.வி. நடிகை

மும்பையை சேர்ந்த இந்தி டி.வி. நடிகை அமன் சந்த்(வயது26). இவர் பல டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரை, கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா உதவி இயக்குநர் தீபக் மிஸ்ரா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் டி.வி. நடிகைக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், அது குறித்து நேரில் பேசவேண்டும் என கூறி அழைத்தார்.

இதையடுத்து டி.வி. நடிகை அமன் சந்த், உதவி இயக்குனர் தீபக்மிஸ்ராவை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள காப்பி ஷாப்பில் சந்தித்து பேசினார்.

கன்னத்தில் அறைந்தார்

அப்போது தீபக் மிஸ்ரா, அமன் சந்துவிடம் தற்போது நாங்கள் பல திரைப்படங்களை இயக்கி வருகிறோம். அந்த படங்களில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். அதற்காக நீங்கள் என்னுடனும், இயக்குனருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறியதாக தெரிகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அமன்சந்த் அங்கு இருந்து எழுந்து செல்ல முயன்றார். அப்போது உதவி இயக்குநர், அமன்சந்தின் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமன் சந்த், தீபக்மிஸ்ராவின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அமன் சந்த் ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.