அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை கூறினார் பஸில்

இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் துரோக செயற்பாடுகளுக்கு, மக்கள் எதிராகியதன் பின்னர் அரசாங்கத்தை மாற்றுவதற்கு அவசியமான தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தாம் செயற்படுவதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு கூறினார்.

அங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முறை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேசிய சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நன்கு படித்த அறிஞர்களின் ஆதரவு தமக்கு கிடைப்பதாக கூறினார்.

நேரடியாக அரசியலுக்கு வர விரும்பாத எனினும் மாற்றத்தை ஏற்படுத்த அவசியம் உள்ள நபர்கள் எங்களிடம் உள்ளனர் எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.