அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார்

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது.

நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 மணிக்கு) ஓட்டுபதிவு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு) ஓட்டுப்பதிவு முடிந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஓட்டு முன்னணி நிலவரங்களும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றாலும் சிலமணி நேரங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றார்.

மத்திய மற்றும் மேற்கு பகுதியில் டிரம்ப் அதிக மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.

அதன்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோலினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி, மிசிசிப்பி, மிசோரி, அர்கன் சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒல்காமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசா சூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாகாணங்களை கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களின அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். ஜனநாய கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார். இவை தவிர மைனே (4), மின்னசோட்டா (10), லோவா (6), ஒரேகா (7) ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை மக்களின் அமோக ஆதரவை பெற்று இருந்தாலும் அவர் வெற்றி பெறமுடியாது. எலெக்டோரல் காலேஜ் என்றழைக்கப்படும் தேர்தல் சபையில் உள்ள 538 தேர்வாளர்களில் 270 பேரின் வாக்குகளை பெறுபவர்கள் அதிபராக முடியும்.

தற்போதைய நிலவரப்படி வெற்றிக்கு தேவையான 270 வாக்குகள் என்ற இலக்கை தாண்டிய டிரம்ப் 276 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரிக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன. மீதமுள்ள பகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாகவே இருந்தன. ஒருசில நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. இந்த கணிப்புகளை பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.