சற்று முன் காரைநகரில் விபத்து: இருவர் படுகாயம்!

சற்று முன் காரைநகர் இலங்கை போக்குவரத்துச்  சேவைக்கு சொந்தமான பேரூந்து தனியார் பேரூந்தை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,  மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதர்க்கான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் காரைநகர் ஆலடி சைவமகாசபை அண்மித்த பகுதியில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன்.

இதன் காரணமாக மக்கள் மாற்று வழியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் காரைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.