வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி

வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. வாரம் 3 முறை வாழைத்தண்டு சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 1 பெரிய துண்டு
பாசிபருப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை -1 கொத்து

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும். (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது (அ) தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில் போடலாம்)

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும்.

* அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும்.

* பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.

* சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.

* வாழைத்தண்டு இரத்தம் சுத்தம் செய்யும் திறன் கொண்டது. சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து மிகுந்தது. உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது.