நில்வளா கங்கையிலிருந்து வெளிவந்த பாரிய முதலை! வியப்பில் வனவிலங்கு அதிகாரிகள்

நில்வளா கங்கையில் பாரிய முதலையொன்று சிக்கியுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கங்கையிலிருந்து பாரிய முதலையொன்று கிராமத்திற்குள் பிரவேசித்துள்ளது.

மாத்தறை, வெல்கொட பிரசேத்தில் வைத்து குறித்து முதலை வனிவிலக்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 18 அடியுடனான இந்த முதலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில் மிக்பெரியதென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வெளிப்பகுதிக்கு வந்துள்ள இந்த முதலை அந்த பகுதி மக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் பாரிய முயற்சியில் நில்வளா கங்களையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பாதங்களை கொண்டுள்ள இந்த முதலை, பிறப்பில் இருந்தே அவ்வாறான நிலைமையை கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸ் அதிகாரிகள், மிரஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கலமெடிய வனவிலங்கு அதிகாரிகள் அதிகாரிகளின் உதவியுடன் இந்த முதலை நில்வளா கங்ககையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.