கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

குருணாநகல் – தம்பதெனிய பன்னல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 44 வயதான பன்னல போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கொலை செய்துள்ள சந்தேக நபர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.