140 அடி உயரத்தில் இருந்து குதித்த இளம்பெண்…. விளையாட்டு விபரீதமானது….

140 அடி உயரத்தில் இருந்து ஒரு பெண் கயிரை கட்டி கொண்டு கீழே குதித்த போது கயிறு திடீரென அறுந்ததால் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியா நாட்டில் உள்ள ஒரு இடத்தில் சுமார் 140 அடி உயரம் கொண்ட பாலத்தின் மீது இருந்து கயிறுகளை கட்டி கொண்டு கீழே உள்ள தண்ணீரில் குதிக்கும் போட்டியை சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த போட்டியில் Yoo (29) என்ற இளம் பெண் கலந்து கொள்ள தனது காதலருடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். பின்னர் அவரது உடலில் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டு கயிறும் கட்டப்பட்டது.

பிறகு அந்த உயரமான பாலத்தின் மேல் சென்ற Yoo கீழே குதிப்பதற்காக ஓடி வந்து குதித்தார். அப்போது எதிபாரத விதமாக அவர் உடலில் கட்டியிருந்த கயிர் அறுந்ததில் அவர் கீழே விழுந்தார்.

இதை வீடியோ எடுத்து கொண்டிருந்த Yooவின் காதலர் ,அவர் கீழே விழுந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் Yoo வை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த Yooவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த குழுவின் தலைவரை,பாதுகாப்பின்றி போட்டியை நடத்தியாக கூறி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.