மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நீண்ட காலமாக 15 வயதான தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னார் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த நபர் தனது மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே, பொலிஸார் தன்னை கைது செய்யப்போவதை அறிந்துகொண்ட குறித்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.