தொடரும் முன்னாள் படையினரின் உண்ணாவிரத போராட்டம்!

அங்கவீனமடைந்த இராணுவத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தமது ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த இவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் அந்தப் போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றியிருந்தனர்.

இதன்படி இன்றைய தினமும் புறக்கோட்டைப்பகுதியில் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.