குடும்ப விஷயத்தை வெளியே சொன்ன சமந்தா!

சமந்தா என்றாலே சம்திங் ஸ்பெஷல் என்று அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியாக சொல்வார்கள். தமிழ், தெலுங்கில் ஸ்டாராக தனியே தெரியும் இவர் இன்று டாப் நடிகைகள் பட்டியலில் ஒருவர்.

சினிமா, சேவை என இருந்தாலும் இப்போது காதலிலும் கமிட்டானதால் மிக பிசியாக உள்ளார். புது வருட பிறப்பு மிக நெருங்கி வரும் வெளியில் நாக சைதன்யாவுடனான இவரின் திருமணம் விரைவில் நடக்க போகிறது.

சென்ற தீபாவளியை தனது ப்ரத்யுஷா அறக்கட்டளை குழந்தைகளுடன் கொண்டாடிய இவர் தன் குடும்பத்தவர்கள் பற்றிய தன் கருத்துக்களை மிக வெளிப்படையாக கூறியுள்ளார்.

எனக்கு ஜோனாதன், டேவிட் என இரு அண்ணன்கள் இருக்கிறார்கள். வழக்கமான அண்ணன் தங்கையை போல் சிறுசண்டைகள் எது இல்லாமல், அவர்களின் மீது அணைப்பு கலந்த மரியாதை உள்ளது.

சொல்லப்போனால் அவர்கள் எனக்கு அப்பா அம்மா மாதிரி. அதிலும் 2 வது சகோதரருடன் மிக ஈசியாக பழகிவிடலாம் என கூறினார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஒரு சகோதரி இருந்தால் வாழ்த்திக்கொண்டே இருப்பாள். என்னுடைய அம்மா எனக்கு, அந்த இரு சகோதர்களுக்கு பதிலாக ஒரு சகோதரியை கொடுத்திருக்கலாம் என குறும்பு நகைச்சுவையுடன் சமந்தா கூறியுள்ளார்.