துர்க்கை அம்மனுக்கு குழந்தையை நரபலி கொடுத்த தந்தை!

தனது எட்டு மாத குழந்தையை ஈவு இரக்கமின்றி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நரென் புர்வா என்ற கிராமத்தில் Chaurasia என்னும் நபர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு எட்டு மாத கை குழந்தை உள்ளது.

தீவிர துர்க்கை காளியம்மன் கடவுளின் பக்தரான Chaurasia திடீரென ஒரு விபரீத செயலை செய்ய முற்ப்பட்டார். அதன் படி தன் குழந்தையை நன்றாக குளிப்பாட்டி துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

பின்னர் குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டில் உள்ள துர்க்கை அம்மன் புகைப்படம் முன்னால் அமர்ந்து கொண்டு கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை இரு முறை அறுத்துள்ளார், வலியால் துடித்த அந்த குழந்தை மறுகணமே உயிரிழந்தது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பின்னர் வந்து குழந்தையின் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் Chaurasia வை கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில், அந்த குழந்தை பிறந்த உடனேயே அவன் அதை கொல்ல முயற்சி செய்துள்ளான்.

துர்க்கை அம்மனுக்கு குழந்தையை நரபலி கொடுத்தால் அந்த கோவிலுக்கு வரும் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என அவர் நினைத்திருக்கிறான்.

அவன் மனநிலையில் கோளாறு உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவமனையில் அவனை அனுமதித்திருக்கிறோம்.

அந்த அறிக்கை வந்த பின்பே எதையும் உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.