உலகநாயகனின் உண்மையை போட்டு உடைத்த முன்னாள் மனைவி…. ஷாக்கிங் ரிப்போர்ட்!

கமல் ஹாசனின் திறமைகள், வெற்றிகள் என பல விஷயங்களை தவிர அந்தரங்க விஷயங்களை யாரும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள்.

அவருடைய முதல் திருமணம் 1978 இல் பிரபல நடன கலைஞர் வாணி கணபதியுடன் நடந்தது. பின் 1988 இல் விவாகரத்து. அதன் பின் இந்த விஷயம் காற்றோடு பறந்து போய்விட்டது.

அந்த சமயத்தில் கமல் என்ன சொன்னார் தெரியுமா?

ஸ்ருதி ஹாஸன் பிறந்தபோது நான் எல்லாபணத்தையும் இழந்த நிலையில் இருந்தேன். ஏனெனில் வாணியை விவாகரத்து செய்ததால் ஜீவனாம்சம் தர வேண்டி இருந்தது. மீண்டும் வாழ்க்கை ஜீரோவிலிருந்து துவங்கியது. அப்போது கூட வாடகை வீட்டில் தான் இருந்தேன் என்றார் கமல்.

வாணி கணபதியின் பதிலடி!

இந்திய நாட்டில் விவாகரத்து செய்ததற்காக தரப்படும் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கிவிடுமா? இல்லை அந்த பெண்ணின் வாழ்நாளுக்கு தேவையான முழு தொகையையும் தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறதா என்ன? போதிய அளவு பணம் தான் கிடைக்கிறதா?

அவர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?

கமல் எப்போது சொந்த வீட்டில் இருந்தார்? திருமணத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். ஆனால் கொஞ்ச நாட்கள் என் வீட்டாரின் சொந்த வீட்டில் இருந்தோம்.

அவரிடம் தேவையான பணம் இருக்கிறது. அதனால் அவருக்கு திவாலாகிவிடும் சூழ்நிலை ஏதும் கிடையாது. தனக்கு திறமை இருக்கிறது என்பதற்காக யார் மேலாவது பழி போட்டுவிடுவார். அவருக்கு வேறு ஏதாவது வழிகளில் பணம் போயிருக்கலாம். அதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்.

கமலிடம் நான் பேசுவது கிடையாது. பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. அவருக்கு அனுதாபம் வேண்டும் என்றால் யார் பெயரையும் பயன்படுத்தி வாங்க கூடாது, அவருடைய வீழ்ச்சிக்கு நான் காரணமே கிடையாது என அதிரடியாக கூறிவிட்டார். கமல் ஹாசன், கவுதமி பிரிவை தொடர்ந்து பல விஷயங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.