யாழ். மாணவர்கள் படுகொலை! பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு! நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை?

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி பிரதிப் பொலிஸ்மா அதிபர், சார்ஜென்ட் மற்றும் மூன்று காவலர்களது விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும். பயத்தினால் அதை கூறுவதற்கு யாரும் முன்வரவில்லை என்றும் நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையை நேரில் கண்ட சாட்சியங்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் நீதவானிடம் சட்டத்தரணிகளும், CIDயினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.