விரும்பிய உணவை சாப்பிடும் ஜெயலலிதா

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளது.

அவருக்கு குழாய் மூலம் உணவு அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இயல்பான முறையில் சாப்பிட துவங்கியுள்ள ஜெயலலிதா சுய நினைவுடன் இருப்பதாகவும் , தனக்கு விரும்பிய உணவை சாப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் 21ம் திகதி தான் கடைசியாக அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து அடுத்த 4 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.