எனது வயிற்றில் ஏசுநாதர் குழந்தையாக இருக்கிறார்: கர்ப்பிணி பெண் பகீர் தகவல்

அமெரிக்க நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது வயிற்றில் ஏசுநாதர் குழந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் Haley(19) என்ற இளம்பெண் தனது தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிதாக இருந்த தனது வயிற்றையும் தாயாருடன் காட்டியுள்ளார்.

மகளின் பதிலால் அதிர்ச்சி அடைந்த தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

ஆனால், அவர் கர்ப்பமாக இல்லை என்றும் உடல் பெருத்துள்ளதால் அவரது வயிறும் பெரிதாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், வீட்டிற்கு திரும்பிய மகள் அவரது தாயாரிடம் ‘மருத்துவர் உண்மையை மறைக்கிறார். நான் நிச்சயம் கர்ப்பமாக இருக்கிறேன்.

இதுமட்டுமில்லாமல், எனது வயிற்றி ஏசுநாதர் குழந்தையாக இருக்கிறார்’ என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மகளின் வார்த்தைகளில் குழம்பிய தாயார் மகளை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

ஏசுநாதர் மீதான அதிக பற்றுதலால் அவர் இவ்வாறு பேசுவதாக கூறி தேவாலய குருக்கள் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், வீட்டிற்கு திரும்பிய பிறகும் ‘தனது வயிற்றில் ஏசுநாதர் குழந்தையாக இருப்பதாக’ அவர் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

மேலும், இச்செய்தி வெளியாகி அவரை நேரடி பேட்டிக்காண தொலைக்காட்சி ஒன்று அழைத்துள்ளது.

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பெண் ‘தான் கர்ப்பமாக இருப்பது உண்மை தான். விரைவில் ஏசுநாதருக்கு தாயாக போகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இளம்பெண் குழப்பமான மனநிலையில் பேசுவதாக உறுதியாக தெரிந்தாலும், அடுத்து நடைப்பெறவுள்ள நேரலை நிகழ்ச்சியில் அவருக்கு அல்ட்ராசவுண்ட் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.