வாழைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – இயற்கை மருத்துவம்

வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.

உடல் எடை குறைக்க :-
வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். பருமனாய் இருப்பவர்கள் குஷிப்படுங்கள். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. உடல் எறையைக் குறைக்கிறது.

மலச்சிக்கலிலிருந்து விடுபட :-
வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.

அதிகமான பசியைக் கட்டுப்படுத்தும்:-
வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவினைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உட்கொண்டால் சாப்பிட்ட நிறைவைத் தரும். அதனால் அதிகப்படியாக உணவினை உண்ணத் தோன்றாது. உடல் பருமனாவதைக் குறைக்கலாம்.

சர்க்கரை வியாதி வராமல் இருக்க :-
பச்சை வாழப்பழம்அல்லது பழுக்காத பழம் அல்லது வாழைக்காய் ஆகிய மூன்றுமே ரத்த செல்களில் குளுகோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

ஆரோக்கியமான ஜீரண உறுப்புக்களை தரும்:-
வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிடி வராமல் ,குடல்களையும்,வயிற்றையும் பாதுகாக்கும்.

பெருங்குடலில் வரும் புற்று நோய் வராமல் விரட்டிவிடும் வாழைக்காய்:-
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது.

எலும்புகளுக்கு பலம் தருகிறது :-
வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது :-
வாழைக்காய் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும். அவ்வகையில் வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.