விஸ்வரூபம் எடுக்கும் உண்மை தகவல்கள்…கவுதமியின் சொத்துக்கள் கமல் வசம்…மகளின் எதிர்காலம் என்னவாகும்?

13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு இதயம் நொறுங்கும் படியான ஒரு முடிவு என்று சொன்னதும், 2 வருடங்கள் யோசித்து எடுத்த முடிவு, ஒரு தாயாக என் மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுத்த முடிவு என்றெல்லாம் கவுதமி கூறும்போது…ஸ்ருதி இதற்கு காரணமா? அல்லது கமலுடன் கிசுகிசுக்கப்படும் நடிகைகள் இருவர் காரணமா? என்றால் …இது வேறு என்கிறார்கள்.

கவுதமியின் சொத்துக்கள் கமல் வசம் தான் உள்ளனவாம். அதை மீட்க எடுத்த போராட்டம் இது என்கிறார்கள்.

கமலின் கணக்கு வழக்கு சொத்து போன்றவற்றை கவுதமி பார்க்கவில்லை. கமல் சொத்து கவுதமியிடம் கொடுக்க வாய்ப்பே இல்லயாம்.

ஏனென்றால், கமல் வீட்டில் பார்த்து வைத்த திருமணத்தில் …வாணி கணபதியுடன் 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார். கமலின் சொத்துக்களை , வருமானத்தை அவர் பார்த்து வந்திருந்தால்…கமல், அவரை விட்டு பிரியும்போது,’ என்கிட்ட ஜீவனாம்சம் தரவே ஒன்றும் இல்லை’ என்று சொல்லியிருக்க மாட்டார். ‘என் சொத்துக்களை, வருமானத்தை எடுத்துபோய் விட்டார்’ என்று சொல்லியிருப்பார்.

அடுத்து, கவுதமிக்கு தன் மகளை ஹீரோயினாக ஆக்க ஆசை. அதற்கு தடை போட்டு வருகிறார் கமல் என்று இன்னொரு தரப்பு சொல்லுகிறது.

தமிழகத்தில் போயஸ் கார்டன் கதவை தட்ட சூழல் இப்போது இல்லாததால், மோடி வீடு கதவை தட்டி இருக்கிறார் கவுதமி. அங்கு தரப்பட்ட உத்தரவாதத்துக்கு அப்புறம்…இந்த பிரிவு அறிக்கை.

கமல் இதை சரியாய் ஹாண்டில் பண்ணி இமேஜை காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.