ஐ.தே.க வின் தொகுதி அமைப்பாளரானார் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து இன்று(02) இதற்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமன கடிதம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது