கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உலகிற்கு அறிமுகப்படுத்திய வட கொரியா!

வடகொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆளும் தொழிலாளர் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று(10) இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுத காட்சி நடந்துள்ளது.

இராணுவ அணிவகுப்பு
இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா ‘ஹ்வாசொங்-20’ எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது.

இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.