தந்தை, மகன்களின் பாசத்தை உணர்த்தும் ஒரு கதையாக ஒளிபரப்பாகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
கடந்த வாரம் மயில் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு புடவை வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோஷப்படுத்தி இருந்தார் சரவணன்.
இந்த வாரம் அவரை Check Up அழைத்து சென்றால் அவர் கர்ப்பமாக இல்லை என்ற விஷயம் குடும்பத்திற்கு தெரியவர அனைவருமே சோகத்தில் மூழ்கி விடுகிறார்கள்.
இதில் சரவணன் செம கோபத்தில் உள்ளார், இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபமாக கூறி விடுகிறார்.
தற்போது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில் ஒரு பிரபலம் நியூ என்ட்ரி கொடுக்கிறார். சுகன்யா முன்னாள் கணவர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய்ராம் என்ட்ரி கொடுக்கிறார்.








