கோர விபத்தில் இருவர் பலி!

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் ஹபரகெட்டிய பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.