கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் பலி!

அமெரிக்கா – கலிபோர்னியாவின் தஹோ ஏரியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் போது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏரியின் தென்மேற்கு பகுதியில் புயல் காரணமாக அதிக அலைகள் எழுந்ததால், 27 அடி (8 மீட்டர்) உயரமுள்ள படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது படகில் பத்து பேர் இருந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தினை அடுத்து இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.