உணவு ஒவ்வாமை மாருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் !

பண்டாரவளை சிறுவர் இல்லத்தில் பராமரிப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் உணவு சாப்பிட்ட பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை(05) அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இரண்டரை வயது மற்றும் ஐந்து வயதுடையவர்கள், என கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.