சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

கம்பஹா – பமுனுகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர்கள் இருவர் பமுனுகம பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பமுனுகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கம்பஹா உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 300,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானமும் மற்றையவரிடமிருந்து 75,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.