பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி!

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அதேவேளை நாட்டை சூழவுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.