தெற்கு கரோலினாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில், இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மிர்ட்டல் கடற்கரையிலிருந்து வட கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் ரிவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை எதனால் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்ற விவரங்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.